கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்.. ஜெயக்குமாருக்கு எதிராக எடப்பாடியிடம் புகார் அளித்த மதுசூதனன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடியை சந்தித்து மதுசூதனன் புகார் அளித்தார்.
ஆர்கே நகர் தொகுதிக்குள்பட்ட மீனவ சங்க தேர்தல் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எடப்பாடியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் மதுசூதனன் சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் தரப்புக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என புகார் அளித்தார். அதோடு மீனவர் சங்க தேர்தலின்போது நடந்த மோதல் குறித்தும் அவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications