பரபரப்புக்கு மத்தியில் இன்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தல்...

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் கிட்டத்தட்ட 1500 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தல் இன்று நடைபெறுகின்றது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டி நிலவுகிறது.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் மோகன கிருஷ்ணன், முன்னாள் தலைவர் பால் கனகராஜ், வேல்முருகன், முத்துராமன் ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு 12 பேரும், செயலாளர், பொருளாளர் பதவிக்கு 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
மேலும், ஜூனியர் செயற்குழு உறுப்பினர் மற்றும் சீனியர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 50 க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்போருக்கு தனி அந்தஸ்து, அதிகார மற்றும் காவல்துறை மட்டத்தில் கிடைக்கும் என்பதால் பதவியைப் பிடிக்க கடும் மோதல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications