இந்து தீவிரவாதம்: கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு
இந்து தீவிரவாதம் பிரச்சனையில் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இந்து தீவிரவாதம் விமர்சனம் தொடர்பாக கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து விமர்சன கட்டுரையை வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டது. கமல்ஹாசன் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில், கமல்ஹாசனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தேவராஜன் வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கமல்ஹான் மீதான தேவராஜனின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நிலவேம்பு கசாயம் தொடர்பான வழக்கிலும் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications