மவுலிவாக்க கட்டட விபத்து: மு.க.ஸ்டாலின் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை: மவுலிவாக்க கட்டட விபத்து குறித்த விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 மாடி அடுக்கு குடியிருப்பு கட்டடத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரகுபதி ஆணையத்தின் விசாரணை குறித்து ஸ்டாலின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மூர்த்தி, அந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூன் மாதம் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றிய அறிக்கையை இதுவரை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications