தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாடக்கோரிய வழக்கு... தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஹைகோர்ட் மறுத்துவிட்டது.
Recommended Video

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாட உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த தமிழாசிரியரின் மகன் ராமபூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ராமபூபதி தனது மனுவில் ஒரு பாடல் முழுவதுமாக எழுதப்பட்ட நிலையில் அதனை மாற்றியமைத்தோ அல்லது சிதைத்தோ பாடுவது இயற்றியவரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே ஏற்கனவே இருந்த பாடலையே இனி பாட வேண்டும் என உத்தரவிட அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைவரும் மரியாதை செலுத்துகின்றனர். முன்பு இருந்த பாடலை பாட உத்தரவிட்டால் சிலர் எதிர்த்து போராடக்கூடும், மீண்டும் பழைய பாடலை கொண்டு வருவதன் மூலம் அமைதியை குலைக்க விரும்புகிறீர்களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு இனி விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications