ஐஐடி போராட்டத்தில் மாணவி கை முறிப்பு.. உள்துறை செயலாளர், கமிஷ்னர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
மாணவி இளவரசியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சென்னை: ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவி இளவரசியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொடர்பாக, உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார். பார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 31 ஆம் தேதி, புரட்சிகர மாணவர் முன்னணியினர் பலர் ஐ.ஐ.டி. வளாகம் முன்பு ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் போலீசார் தரதரவென சாலையில் இருந்து இழுத்து சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் போது, பெண் காவலர் ஒருவர் இளவரசி என்ற மாணவியின் கையை முறுக்கி காயப்படுத்தியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அத்துமீறி நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜசேகர் என்பவர் தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இளவரசியின் கையை காயப்படுத்தியது தொடர்பாக உள்துறை செயலளர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டடார் வழக்கு விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications