மதுரையில் 3 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

Madurai
மதுரை: மதுரையில் மூன்று தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக் கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ‘மர்ம' போன் வந்தது. போனை போலீசார் எடுத்து பேசியபோது, எதிர் முனையில் ‘‘பொன்மேனியில் உள்ள டால்பின் மெட்ரிக் குலேசன் பள்ளியிலும், டி.வி.எஸ். நகரில் உள்ள டி.வி.எஸ். பள்ளியிலும், ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது 9 மணிக்குள் வெடிக்கும் என்றும் 2 ‘மர்ம' நபர்கள் பேசி கொண்டு இருந்ததாக அந்த பெண் கூறி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

இந்த மிரட்டல் சம்பவம் குறித்து உடனடியாக எஸ்.எஸ். காலனி போலீசுக்கும், ஜெய்ஹிந்த் புரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலமும் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதேபோல் பொன் மேனியில் உள்ள பள்ளிக்கு எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று பள்ளி முழுவதும் சோதனையிட்டனர். அங்கும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என தெரிய வந்தது.

பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிய ‘மர்ம' ஆசாமிகள் யார் என்றும், போனில் பேசிய பெண் யார்? என்பது குறித்தும் சுப்பிரமணியபுரம் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மதுரையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+