Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் மேலும் 14 வெடிகுண்டுகள் பறிமுதல்-வரிச்சியூர் செல்வம் தம்பி செந்தில் வீட்டில்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் வீட்டிலிருந்து மேலும் 14 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை அண்ணாநகர் கிழக்கு தெருவில் ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 வெடிகுண்டுகள் கடந்த 10 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

Madurai police confiscates 14 bombs

இந்த நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், டிரைவர் பார்த்திபன் மதுரை கோர்ட்டிலும், கூட்டாளி கீரிமணி விழுப்புரம் கோர்ட்டிலும், வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில், அவரது நண்பர் சுப்பிரமணி ஆகியோர் மேலூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் வெடிகுண்டுகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த பிஸ்டல் பாண்டியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தெரிவித்த தகவலின் பேரில் வரிச்சியூரை சேர்ந்த சமருதீன்பாவை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு குறித்து விசாரிக்க வரிச்சியூர் செல்வத்தையும், அவரது டிரைவர் பார்த்திபனையும் அண்ணாநகர் போலீசார் காவலில் எடுத்தனர். விசாரணையில், பெருசு அழகர் என்பவருக்கும் தங்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையொட்டி பாதுகாப்பிற்காக வெடிகுண்டுகளை மதுரைக்கு வாங்கி வந்தோம்.

வேறுசில ரவுடிகள் மூலம் இருதரப்பும் பேசி சமரசமாகி விட்டோம். இதனால் குண்டுகள் தேவையில்லாமல் போனது. இந்த விவகாரம் பற்றி தெரியவந்து போலீசார் விசாரித்ததால் குப்பைத் தொட்டியில் குண்டுகளை வீசினோம் என்று அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து இந்த குண்டுகள் வாங்கப்பட்டன. மொத்தம் 25 குண்டுகள் வாங்கப்பட்டன. அதில் 11 சிக்கி விட்டது. மீதமுள்ள 14 குண்டுகள் எங்கே என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வரிச்சியூர் செல்வம் போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தின்படி செந்திலின் வீட்டில் மீதம் உள்ள குண்டுகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வரிச்சியூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்தனர்.

அங்கு மாட்டுதொழுவத்தில் ஒரு அட்டை பெட்டியில் உமி போட்டு மறைத்து வைத்திருந்த 14 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த குண்டுகளை பாதுகாப்பாக மலை பகுதிக்கு கொண்டு சென்று போலீசார் அழித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+