Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் கிளர்ச்சி... மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 Madurai Students on Protest charged with batons by Police

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தின. இதற்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருவாரூர், கோவை, அரியலூர், மதுரை, சென்னை என பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். அரியலூரில் 2000 கல்லூரி மாணவர்களும், மதுரை அருகே மேலூரில் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் மேலூர் மற்றும் அழகர்கோவிலில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+