தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு... கைதுக்கு அஞ்சாமல் வழக்கமான பணிகளில் மாஃபா பாண்டியராஜன்!
மதுசூதனை ஆதரித்து ஆர்கே நகரில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாஃபா பண்டியராஜன் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் தனது வழக்கமான வேலையில் ஈட
சென்னை: ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா சவப்பெட்டி உருவபொம்மையின் மீது, தேசியக் கொடியைப் போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அழகு முத்துச் செல்வி ஆகியோர் மீது காவல்துறையினர், தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இதுகுறித்து சலசலப்பு அடையாமல் தனது வேலைகளில் அவர் வழக்கம் போல ஈடுபட்டுள்ளார்.

ஆர்கே நகரில் இடைதேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. அப்போது ஒபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனுக்கு வாக்கு சேகரிக்க, ஜெயலலிதாவின் சவப்பெட்டிஉருவபொம்மை மீது தேசியக் கொடியை போர்த்தி ஓட்டு சேகரித்தனர். அந்த பிரச்சாரத்தில் மாஃபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி, குப்பன் ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாஃபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கீழ், குப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களும் கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு நிலவுகிறது.
ஆனால், மாஃபா பாண்டியராஜன் தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications