For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களால்தான் எடப்பாடி அரசு நீடிக்கிறது... மற்றொரு குண்டை போடும் மைத்ரேயன்

துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களால்தான் எடப்பாடியின் அரசு நீடிக்கிறது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இவர்தான் மைத்ரேயன்... புட்டு புட்டு வைக்கும் அடேங்கப்பா அன்வர்ராஜா எம்.பி..வீடியோ

    சென்னை: துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்றும் அவரை கறிவேப்பிலை போல் தூக்கி போட முடியாது என்றும் மைத்ரேயன் எம்.பி. அதிரடியாக ஒரு குண்டை போட்டுள்ளார்.

    அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனால் மனங்கள் இன்னும் இணைய வில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.

    Maithreyan says that Edappadi government is in power because of OPS faction MLAs

    இதற்கு பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையோ அதிமுக இணைப்பு குறித்து மைத்ரேயன் கூறியது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்தார். இதற்கு பதிலடியாக மைத்ரேயன் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் தம்பிதுரை கூறுவது போல் அதிமுக இணைப்பு குறித்தான கருத்து எனது சொந்த கருத்து அல்ல என்றும் அடிமட்ட தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஒரு புதுகுண்டை மைத்ரேயன் போட்டுள்ளார்.

    அதில் எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு காரணமே ஓபிஎஸ் மற்றும் அவரது அணி எம்எல்ஏக்கள்தான். எனவே ஓ.பன்னீர் செல்வத்தை யாரும் கறிவேப்பிலை போல் தூக்கி எறிய முடியாது என்று கூறியுள்ளார்.

    English summary
    Maithreyan MP says that Edappadi government does not dissolve because of O.Panneer selvam and his faction MLAs only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X