For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுகாதாரமற்ற உணவு... திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு சிக்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட ஒருவருக்கு ஃபுட் பாய்சன் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சுகாதாராத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோட்டீஸ் அளித்துள்ளனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் சகோதரர்தான் பாதிக்கப்பட்ட நபராவார். பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

Man admitted hospital after eating Thalappakatti Biriyani Dindigul

வயிற்று வந்தது எப்படி என்று சந்தேகம் அடைந்த கார்த்திக்கேயன், மீண்டும் ஒரு பிரியாணியை பார்சல் வாங்கி அதை பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கொடுத்து சோதனை செய்துள்ளார். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் திண்டுக்கல் சுகாதராத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் நகரில் உள்ள தலப்பாக்கட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் இறைச்சி, மீன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் சரியாக பராமரிக்காமல் காய்கறிகளுடன் போட்டு வைத்துள்ளனர். அதோடு உணவு சமைக்கும் இடமும் சுகாதரமற்ற முறையில் இருந்தது பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதல்நாள் சமைத்த உணவையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர். அதோடு இறைச்சி பொருட்களை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் உடனடியாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தலப்பாக்கட்டி பிரியாணிக்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. நேசத்தோடு செய்யப்படுகிறது என்று கூறப்படும் பிரியாணி கடைக்காரர் கொஞ்சம் சுத்தம், சுகாதாரத்தோடு சமைத்தால் நன்றாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாகும்.

English summary
A Man suffered food poisoning after consuming biryani in Dindigul Thalappakatti Biriyani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X