மாணவியுடன் உல்லாசம்- கணவரை போலீசில் மாட்டிவிட்ட மனைவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மாணவி ஒருவரை திருமணம் செய்ய முயன்றவரை மனைவியே காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் சவுந்தர்யா நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.

இவர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 2011 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வினோத்குமார், வேலைபார்க்கும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்தவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர்.

இவரது தந்தை சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது பார்த்த வினோத்குமார் அவர் மீது காதல் வயப்பட்டார். ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை மயக்கி தனது காதல் வலையில் விழவைத்தார்.

அதன் பின்னர் வினோத்குமாரும், மாணவியும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். வினோத்குமார் திருமணமானவர் என்பது தெரிந்தும், மாணவி தொடர்ந்து வினோத்குமாரை காதலித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அம்மாணவியின் தந்தை பணி மாறுதலாகி தனது சொந்த ஊரான டேராடூனுக்கே குடும்பத்தோடு சென்றுவிட்டார். இதனால் மாணவியைக் காணாமல் வினோத்குமார் தவித்தார். பின்னர் விஷயம் அறிந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் டேராடூன் சென்று அப்பெண்ணை சந்தித்துவிட்டு வந்தார்.

இதுபற்றி தெரிந்ததும் வினோத்குமாரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாணவியை திருமணம் செய்ய வினோத்குமார் முடிவெடுத்தார். அதன்படி 2 நாட்களுக்கு முன் அப்பெண்ணை பார்ப்பதற்கு வினோத்குமார் டேராடூன் சென்றார். திட்டமிட்டபடி யாருக்கும் தெரியாமல், அம்மாணவியை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டு வந்தார்.

இதற்கிடையில் வினோத்தின் மனைவி, மாணவியின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு, வினோத்குமார் காதல் விவகாரத்தையும், இருவரும் திருமணம் செய்ய இருப்பது பற்றியும் விளக்கமாக கூறினார்.

வினோத் மனைவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டுவிடவே அவர் டேராடூன் போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தனது கணவர் வினோத்குமார், அம்மாணவியை அழைத்து வருவதையறிந்து வினோத்தின் மனைவி தனது உறவினர்கள் 5 பேருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே காத்திருந்தார்.

ரயில் வந்ததும் அதில் இருந்து இறங்கிய ஜோடியை சுற்றிவளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தான் வினோத் குமார் போலீசாரிடம் சிக்கினார். மேலும், வினோத்குமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், அவரும், மாணவியும் உல்லாசமாக இருந்த காட்சியும் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கு வினோத்குமார் அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸார், டேராடூன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தனது மகளை அழைத்துச் செல்வதற்காக அவருடைய தந்தை சென்னை புறப்பட்டு வருகிறார். தற்போது மாணவி புரசைவாக்கத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+