பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரனுக்கு 3 ஆண்டு சிறை
தேனி: சின்னமனூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் சரகம் எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான பாண்டியன்(42). அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு பேருமே இறந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
திடீர் என்று எழுந்த அவர் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயனறார். தந்தையே பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தாரை எழுப்பி நடந்ததை தெரிவித்தார்.
இது குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பலாத்கார முயற்சி வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மகளிர் நீதிமன்ற நீதிபதி தனியரசு பாண்டியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.
அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் 3 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.