தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள்: மணியரசன் கடும் குற்றச்சாட்டு
தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Recommended Video

சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் கேட்க பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்தனர். சூரப்பா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜா, மணியரசன் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது தமிழர்கள் ஊழல் செய்வதால்தான் வெளிமாநிலத்தவரை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளதாக ஆளுநர் நியமனத்தை நியாயப்படுத்திய தமிழிசை மற்றும் பொன்னார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உரிமை கொடுக்காது
அதற்கு மணியரசன் கூறுகையில் தமிழர்கள் ஊழல்வாதிகள் என்றால் இவர்கள் யார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பச்சை துரோகம் செய்கிறார்கள். பதவிக்காக எவ்வளவு முயன்றாலும் இவர்கள் இருவருக்கும் பாஜக தலைமை சம உரிமை கொடுக்காது.

ஐபிஎல்லை தடுத்திருக்கலாம்
எட்டி உதைக்கும் காலை தமிழக ஆட்சியாளர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பச்சைக் கொடி காட்டுவோரை தமிழக மக்கள் துச்சமெனத் தூக்கி எறிவார்கள். தமிழக அரசு நினைத்திருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டை தடுத்திருக்கலாம் என்றார் மணியரசன்.

தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா
இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரை ஏன் துணை வேந்தராக்கினீர்கள்? தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா? இதற்கு தமிழக அரசுதான் காரணமா.

மாலை 5 மணிக்கு கூடுவோம்
இசைப்பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் வேறு மாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சிலை அருகே கூட உள்ளோம். ஐபிஎல் போட்டிகளை எதிர்ப்பது தார்மீகக் கடமை. தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் பாரதிராஜா.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications