வருகிறது பொங்கல்... பானையில் கட்டப்படும் மஞ்சள் குலை உற்பத்தி களை கட்டுகிறது

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் குலை முக்கிய பங்கு வகிக்கும். இந்த மஞ்சள் குலை தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மஞ்சள் குலையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு மஞ்சள் குலை உற்பத்தி அபாரமாக உள்ளது. சேர்வைககாரன் மடத்திலிருந்து சிவத்தையாபுரம் வரை வயல் முழுவதும் மஞ்சள் குலையாக காட்சி தருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் விளையும் மஞ்சள் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வெளி மாநில வியாபாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விவசாயிகளிடம் மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், வயது தெரிந்ததில் இருந்து மஞ்சள் பயிரிட்டு வருகிறோம். மஞ்சள் விளைப்பதற்கும் முன் குழி தோண்டவும், மண் குவிக்கவும் பணியாளர்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அதே போன்று களை எடுக்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை.
மோட்டார் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் பார்த்து வருவதால் கூடுதல் செலவு ஏற்படுகின்றது. இதனால் அனைத்து விவசாயிகளும் குறைந்த பரப்பிலேயே மஞ்சள் பயிரிடுகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் தோட்டத்தகு்கு வந்த மஞ்சளை பார்த்து விலை நிர்ணயம் செய்கின்றனர்.
குலை ஓன்று ரூ.10லிருந்து ரூ.12 வரை போகும். இந்த ஆண்டு மஞ்சள் குலை உற்பத்தி அதிகமாக இருந்தாலும் கூட எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications