சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம்: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.