பொறுமை இழந்து உக்கிரமாக கனைக்கும் திராவிட ' மாடுகள்' - மனுஷ்யபுத்திரன்
சென்னை: மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோஷம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபமெடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த களேபரத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் 'திராவிட மாடு' என்ற பெயரில் எழுதிய கவிதையும் வைரலாக பரவி வருகிறது.
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என கேரளா கொதித்துக் கொண்டிருக்கிறது.
கேரளாவில் மாட்டிறைச்சி திருவிழா தெருவெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற பெயரில் உருவாக வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த நிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் 'திராவிட மாடு' என்ற பெயரில் தற்போதைய சூழலை வைத்து எழுதிய கவிதையும் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மனுஷ்யபுத்திரன் கவிதை
திராவிட மாடு
..................................
மாட்டுக்கு கொம்பு சீவு
வண்ணம் தடவு
நம் திராவிட மாட்டுக்கு
மாட்டை கட்டிய கயிறை தறி
வரலாற்றின் பட்டிகளைத் திற
திராவிட மாட்டை அவிழ்த்து விடு
திராவிட மாடுகள் வயலில்
ஆழ உழுபவை
திராவிட மாடுகள்
வாடிவாசலில் சீறிப் பாய்பவை
திராவிட மாட்டுபால்
சத்துக்கள் நிறைந்தவை
திராவிட மாட்டுக்கறி
மனதிற்கு இச்சை தருபவை
மாட்டுத்திருடன்
அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான்
தந்திரமாக
பட்டிக்குள் நுழைகிறான்
நீ இப்போது
திராவிட மாடுகளை அவிழ்த்து
கையில் பிடித்துக்கொண்டு
மாட்டுச் சந்தைக்குச்செல்
மாடுகளை விற்று
உழவுக்கு தானியங்கள் வாங்கு
நமது நிலங்கள் பாழ்பட்டு விட்டன
நமது மாடுகள் தீவனமின்றி
வயல் வெளிகளில் செத்து விழுகின்றன
நமக்குத் தெரியும்
நம் மாடுகளை என்ன செய்ய வேண்டும் என்று
ஐய்யாயிரம் வருடங்களாக
இந்த மாடுகளை நாங்கள்
எங்களோடு பராமரித்து வருகிறோம்
மாட்டிற்கு எப்படி பிரசவம் பார்க்க வேண்டுமென்று
எங்களுக்குத் தெரியும்
நோயுற்ற கன்றுகளுக்கு
என்ன மருந்து தர வேண்டும்
என்று எங்களுக்குத் தெரியும்
எந்தநேரம் எங்கள் மாடுகளுக்கு'
இணை சேர்க்க வேண்டும் என்று
எங்களுக்குத் தெரியும்
மாட்டுத்திருடர்கள் போன திசையை
எப்படிக் கண்டுபிடிப்பது என்று
எங்கள் ஜோசியர்களுக்குத் தெரியும்
மாட்டுத்திருடனுக்கு
ஒரு மண்ணும் தெரியாது
அவன் தரகனாக இருந்து
திருடனாக மாறியவன்
அவன் நம் மாடுகளை கவர்ந்து கொள்ள
இனிய மொழிகள் பேசுகிறான்
நன்கு வெந்த
ஒரு திராவிட மாட்டு மாமிசத்துண்டை எடுத்து
அவன் வாயில் திணி
மாட்டு சந்தைக்கு எங்கள்
மாடுகளை நாங்கள் அழைத்து செல்கிறோம்
சந்தையின் வழியில்
முள் வேலிகள் போடப்பட்டிருக்கின்றன
' மாற்றுப்பாதையில் செல்லவும்''
என்று ஒரு அறிவிப்புப் பலகை
கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது
திராவிட மாடுகளுக்கு
திராவிட நாட்டில் ஒரு சந்தை
இருக்கிறது
திராவிட மாடுகள்
பொறுமை இழந்து
மண்ணைக் கிளறுகின்றன
எங்கோ ஒரு திராவிட மாடு
உக்கிரமாக கனைக்கிறது
நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும்
28. 5. 2017
இரவு 10. 48
மனுஷ்ய புத்திரன்
#dravidanadu
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications