தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்று இரவு சில இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்யும்.
இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும்.
கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications