மாட்டுப்பொங்கல் கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்- கோவில்களில் நந்திக்கு அபிஷேகம்
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவான மாட்டுப் பொங்கல், தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை: பொங்கல் பண்டிகையின் முக்கிய விழாவான மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் பொதுமக்கள், மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், மாலைகளை போட்டு அலங்காரங்கள் செய்தும், பூஜைகள் செய்தும் வருகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் கால்நடைகளைப் போற்றும் வகையில், மாட்டுப்பொங்கல் கிராமங்களில் உற்சாகமாக மக்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், மணிகள், கயிறுகள், ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்தும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை என்ற சோகம் இருந்தாலும் பல கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து பூஜை செய்தனர். மாடுகளை அவிழ்த்து விட்டு ஓட விட்டனர்.

கால்நடைகளுக்கு மரியாதை
மாடுகளை குளிப்பாட்டியும், அவற்றுக்கு மாலைகள் அணிவித்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாட்டுப் பொங்கலையொட்டி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில்களில் பூஜை
சென்னையில் பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், மாடுகளை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து கடலில் குளிப்பாட்டினர். பின்னர் மாடுகளை அலங்கரித்தும், கோவில்களுக்கு அழைத்துச் சென்றும், பூஜைகள் நடத்தினர். பொங்கல், வாழைப்பழம் ஆகியவைகளை மாடுகளுக்கு கொடுத்தனர்.
கோவில்களில் இருந்த பசுமாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நந்திக்கு அபிஷேகம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் நூற்றுக்கும்மேற்பட்ட பசுமாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. மூவாயிரம் கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், அனைத்து வகை இனிப்புகள், பூக்களைக் கொண்டு மஹாநந்திக்கு சோடச உபசார சிறப்பு பூஜை நடைபெற்றது.

தஞ்சையில் சிறப்பு அபிஷேகம்
பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலலேஸ்வரர் திருக்கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, திருக்கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் கோயில் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பலூன் மற்றும் மாலை அணிவித்து, நந்தி சிலை அருகே நிறுத்தப்பட்டன. அவற்றை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications