For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

600 தமிழக மீனவர் படுகொலைக்கு காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்க- சென்னையில் போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 600 தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மே 17 இயக்கத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா வீழ்த்தியதால் ஆத்திரமடைந்த அந்நாட்டு கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், மாரிமுத்து, அந்தோனிராஜ், ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த மீனவர்கள் உட்பட இதுவரையில் 600 தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
The May 17 Movement demands that India should arrest the Sri lankan Navy persons for 600 Tamilnadu fishermen Killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X