3 அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களும் ஜெ.வை சந்தித்து ஆசி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்வருமான ஜெயலலிதாவை, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி கணபதி ப. ராஜ்குமார், திருநெல்வேலி மாநகராட்சி இ.புவனேஸ்வரி, தூத்துக்குடி மாநகராட்சி ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications