ஒரே நாளில் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வைகோ
சென்னை: மதிமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்ட வேட் பாளர்களின் பட்டியல் 16ம் தேதி சனிக்கிழமை வெளியிடப் படுகிறது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு பிரச்சாரம் கிளம்புகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 27 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வழங்கப்பட்டது. வேட்பாளர் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம்.

அதைத்தொடர்ந்து, நேர்காணல் பிற்பகல் 3 மணி முதல் நேர்காணல் தொடங்கியது. 7மணி முதல் நேர்காணல் நடத்தும் வைகோ சனிக்கிழமையன்று சென்னை அண்ணா நகரில் காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார் என மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் ஜனவரி மாதமே விருப்பமனு கொடுத்து மார்ச் மாத இறுதிக்குள் நேர்காணல் நடத்தி முடித்து கடந்த வாரமே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.

மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவும் 4 பகுதிகளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று மாலை இறுதி செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவில் ஒரே நாளில் விருப்பமனு வழங்கி, நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போகிறார் வைகோ.












Click it and Unblock the Notifications