ரஜினியை மோடி சந்தித்தது புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.. பொன். ராதா
நாகர்கோவில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நரேந்திர மோடி சந்தித்தது புதிய சரித்திரத்தையும், அத்தியாயத்தையும் ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதை அவர் தெரிவித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியிலிருந்து...
சரித்திரம்- அத்தியாயம்
நரேந்திரமோடி வந்து சென்றது அரசியலில் புதிய சரித்திரத்தையும், புதிய அத்தியாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி மீது மரியாதை- அன்பு
ரஜினிகாந்தை மோடி சந்தித்ததும், மோடியுடன் ரஜினிகாந்த் உரையாடியதும் அவர்களுக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ரஜினிககும் மிகுந்த மதிப்பு - மரியாதை
நரேந்திர மோடி மீது ரஜினிகாந்த் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்.
அதிமுக ரிவர்ஸ் கியரில் போகிறது
தமிழ்நாடு முழுவதும் 40 நாள் பிரசாரத்தை முடித்த நிலையில் பா.ஜ.க பற்றி ஜெயலலிதா விமர்சனம் செய்திருப்பது, அ.தி.மு.க. பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது.
மறுமலர்ச்சி ஏற்படப் போகிறது
வருகிற காலம் தமிழ்நாட்டுக்கு மறுமலர்ச்சி ஏற்படுகிற காலமாகும். உலக தமிழர்களின் நலனை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை என்று நரேந்திரமோடி சொல்லியிருப்பது நிச்சயம் நிறைவேறும்.
குமரிக்கும் வருவார் மோடி
கன்னியாகுமரி தொகுதியில் மோடியின் பிரசாரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.