எம்எல்ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கே அதிகாரம்... உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் பதில்
டெல்லி : எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், செயலாளர் ஜமாலுதீன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு, சட்டப்பேரவை சபாநாயகர், செயலாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் சார்பாக வழக்கறிஞர் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க முடியும். பேரவை விதிகளை மீறியதால், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
எம்எல்ஏக்கள் இடைநீக்கம் சட்டப்பேரவை அதிகார வரையறைக்குள் வருகிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் முடிவை சட்ட ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications