எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: பேனர்களை அகற்ற உத்தரவு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அதிமுகவினர் விதியை மீறி வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அதிமுகவினர் விதியை மீறி வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் மிகவும் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இன்று மாலை சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது.
[எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: படையெடுத்த அதிமுகவினர்.. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ]
மாலை 4 மணிக்கு இந்த விழா தொடங்கும் .இதற்காக சென்னை முழுக்க பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பாதசாரிகள் நடக்கும் நடைமேடையில் இப்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் விதியை மீறி இதுபோல் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதையும் மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர்கள் விதிமுறையை மீறி வைக்கப்பட்டு இருப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
அதில் பதில் அளித்த தமிழக அரசு 120க்கும் அதிகமான முறைகேடான பேனர்களை அகற்றிவிட்டோம். வேறு எங்கும் விதிமுறையை மீறி பேனர் வைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதற்கு டிராபிக் ராமசாமி தரப்பு, அவர்களே முறைகேடாக பேனர் வைத்ததை ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நிறைய பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதையும் நீக்க வேண்டும் என்றனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக முறைகேடாக விதியை மீறி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications