எம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 29வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இதே நாளில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்த போது வரலாறு காணாத கூட்டம் கூடியது. சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியோடு கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க அதனை அமைச்சர்களும், அதிமுகவினரும் உணர்ச்சி பொங்க திரும்ப கூறினர். அதே போல அதிமுக ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சி அமைந்து 6 மாதத்திற்கு உள்ளாகவே முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் 29 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லாத நிலையில், மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications