எம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 29வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இதே நாளில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்த போது வரலாறு காணாத கூட்டம் கூடியது. சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியோடு கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க அதனை அமைச்சர்களும், அதிமுகவினரும் உணர்ச்சி பொங்க திரும்ப கூறினர். அதே போல அதிமுக ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சி அமைந்து 6 மாதத்திற்கு உள்ளாகவே முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் 29 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லாத நிலையில், மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications