For Quick Alerts
For Daily Alerts
Just In
கோழிகள் ஏற்றி வந்த மினி லாரி மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி
கோவை: கோவை அருகே கோழிகளை ஏற்றி வந்த மினிலாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 250க்கும் அதிகமான கோழிகளும் பலியாகின.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து, வால்பாறை நோக்கி 600 கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இதில் வால்பாறையைச் சேர்ந்த ஆறுசாமி(31), சரவணகுமார்(29), லாலா ஜாய் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் திடீரென வாகனம் நிலை தடுமாறிச் சென்று, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.
Comments
English summary
three killed in mini lorry accident in kovai near
Story first published: Thursday, September 15, 2016, 2:39 [IST]