நாங்க குடிக்கமாட்டோம்.. குடிக்கிறவங்களா பாத்து திருந்தனும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நாங்க குடிக்க மாட்டோம் என்றும் குடிக்கிறவர்களாக பார்த்து திருந்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை: நாங்க குடிக்க மாட்டோம் என்றும் குடிக்கிறவர்களாக பார்த்து திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டு பூரண மதுவிலக்கு கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் குடிகாரர்களாக உள்ளனர். வீட்டை பார்ப்பதில்லை.
குடும்பத்தையும் கவனிப்பதில்லை. சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் விட்டு விடுகின்றனர்.
டாஸ்மாக் நீங்கள் (அரசு) தானே திறக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள். அது இல்லாட்டி கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துவிடுகின்றனர். இது நம்முடைய தாய்மார்களுக்கு தெரியும். ஆனால் இளைஞர்களுக்கு தெரியாது.
ராஜாக்கள் காலத்தில் இருந்தே அந்த பானம் , இந்த பானம் என்று குடித்து உடம்பை கெடுத்து கொண்டார்கள். குடிக்காதவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள், அதற்கு நாங்களெல்லாம் ஒரு சாட்சி.
குடிப்பவர்களும் எங்க பார்த்தாலும் உள்ளனர். அவர்களாக பார்த்து திருந்தி கொள்ள வேண்டும் என்றார் சீனிவாசன்.