செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்!
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை தவிர்த்து கேமரா மேன்களுக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை தவிர்த்து கேமரா மேன்களுக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது தங்களின் கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கேமராமேன்களுக்கு பேட்டி
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் அவர் பேட்டியளித்தார்.

தொடரும் தேடுதல்..
அப்போது ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மீட்பு பணியில் கப்பல், மற்றும் விமானப்படையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

பிற மாநிலங்களில் பத்திரம்
ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்கள் 2,805 பேர் பிற மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். லட்சத்தீவில் 283, கேரளாவில் 152, கர்நாடகாவில் 975, மகாராஷ்டிராவில் 236 பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

போர்க்கால அடிப்படையில்..
ஆளில்லா தீவுகளிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் சந்திப்பு திடீர் ரத்து
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவரது செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications