கமல்ஹாசனை அரசியல் களத்தில் சந்திக்க தயார்.. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
சென்னை: நடிகர் கமல்ஹாசனை களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பிற்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றோ தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில், அரசியல்வாதி என்றால் மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கமல் தன்னை அரசியல்வாதி எனக் கூறுகிறார் எனத் தெரியவில்லை.
திரைத்துறையில் கமல்ஹாசன் நல்ல நடிகராக திகழ்ந்தவர். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கமல் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் புறக்கணித்தார்கள், தோற்கடித்தார்கள் என்பதை கமல்ஹாசன் உணரவேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம்.
மேலும் அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம் சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்












Click it and Unblock the Notifications