எங்களை மத்திய அமைச்சராக்கும் கட்சிக்கே லோக்சபா தேர்தலில் ஆதரவு.. அதிர வைக்கும் அதிமுக அமைச்சர்
Recommended Video

அருப்புக்கோட்டை: அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையிலிருந்து அதிமுக சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணி திருச்சுழியில் நிறைவுற்றது. இதையடுத்து அங்கு நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதகம் வலுவாக உள்ளது. இதனால் தற்போதைக்கு ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது.
டெல்லியில் இனி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்ய முடியும். அதுவும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால்தான் ஆதரவளிக்க முடியும். இனி எந்த கட்சி அமைச்சர் பதவியை கொடுக்கிறதோ அந்த கட்சிக்கே ஆதரவு கொடுப்போம் என்றார்.
பெரும்பாலும் அதிமுக அமைச்சர்கள் சர்ச்சையை கிளப்பி பேசி வருவது வாடிக்கைதான் என்றாலும் மாற்றி மாற்றி பேசி வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரன்-அதிமுக மோதலின்போது ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களை மோடி காப்பாற்றுவார் என்று பகிரங்கமாக அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications