For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை.. தியானம்தான் செய்தார்.. சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ!

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானம் தான் செய்தார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயேந்திரருக்கு தொடரும் எதிர்ப்பு... சங்கரமடத்தில் போலீஸ் குவிப்பு

    மதுரை: தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானம் தான் செய்தார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தே இருந்தார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    வலுக்கும் கண்டனங்கள்

    வலுக்கும் கண்டனங்கள்

    ஸ்டாலின், திருமாவளவன், வேல்முருகன், வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவத்துள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    தியானம்தான் செய்தார்

    தியானம்தான் செய்தார்

    இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

    விஜயேந்திரர் நேர்மையானவர்

    விஜயேந்திரர் நேர்மையானவர்

    விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு கட்டியுள்ளார். விஜயேந்திரர் நேர்மையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

    அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

    விஜயேந்திரர் அனைவரையும் மதிக்கக்கூடியவர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். விஜயேந்திரருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Minster Selur Raju support Vijayendra saraswathi. He has said that Vijayendra saraswathi was meditating when tamil thaai vazhthu was tuned. He also says Vijayendrar has not done anything wrong. Vijayendrar is giving respect to everyone, Minister Selur Raju said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X