அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது ஏன் தெரியுமா? 'செங்ஸின்' கண்டுபிடிப்பு
மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வது குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மார்ச் ஒன்றாம் தேதி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன,இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்தார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுதும் மாண 8 லட்சத்து 67 ஆயிரம் பேரும், பிளஸ் 1 மாணவர்கள் 8 லட்சத்திற்கு மேற்பட்டோரும் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக கூடுதலாக 500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எந்த பிரச்னையும் எழாமல் இருக்க பறக்கும்படை, கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர் கேள்வி எழுப்பினர்.

ஷாக்கான செய்தியாளர்கள்
அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதாகவும் கேட்டனர். மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அரசுப் பள்ளியில் மற்றும் ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

சுதாரிப்பாக பதில் அளித்த அமைச்சர்
இதற்கு பதிலளித்த அமைச்சர் தனியாருக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறது. நாங்களும் அதனை உணர்ந்து தான் கல்வித் தரத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம்.

அடுத்த ஆண்டில் கூடும்
அடுத்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாட மாற்றம் செய்யப்படுகிறது. மாற்றங்கள் வரும் போது அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications