சென்னையில் அமைச்சர் சண்முகநாதனின் பேரனை அரிவாளால் வெட்டிய 4 பேர்
சென்னை: சென்னையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனின் பேரனை அடையாளம் தெரியாத நான்கு பேர் அரிவாளால் வெட்டினர்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் பேரன் ஜெயபால்(25). அவர் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு அவர் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்ப தயாரானார். அப்போது அங்கு 4 பேர் வந்து ஒருவருக்கு எலும்பு முறிந்துவிட்டது வந்து கட்டு போடுங்கள் என்று ஜெயபாலை அழைத்தனர்.
அவர் கிளம்பும் முன்பு அந்த 4 பேரும் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் ஜெயபாலின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications