காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.. பொன் ராதாகிருஷ்ணன் சரமாரி சாடல்
காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சரமாரியாக சாடியுள்ளார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சரமாரியாக சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார். ஸ்டாலினின் நடைப்பயணம் காவிரிக்காக அல்ல; அரசியலுக்காக தான் என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இரட்டை வேடம்
மேலும் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திமுகவின் போராட்டம், தமிழர்களுக்காகவா? கூட்டணிக் கட்சியினருக்காகவா? என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

தொழில் வாய்ப்பு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், தமிழகத்தில் தொழில் வாய்ப்பு குறையும் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தொழில் வாய்ப்பு குறைய வேண்டும் என்பதை ஸ்டாலின் விரும்புகிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

கறுப்புக்கொடி போராட்டம்
திமுக போராட்டம் நடத்துவது தமிழர்களுக்காகத்தான் என அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திமுகவின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பிரதமருக்கு எதிரானது அல்ல, தமிழர்களுக்கு எதிரானது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சந்திக்காதது ஏன்?
காவிரி விவகாரத்தில் பெங்களூருவை நோக்கி ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டால் பாராட்டியிருப்பேன் என்றும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தாதது ஏன் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications