ஒரு தொகுதியில் வெற்றிபெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டது.. விளாசிய அமைச்சர் தங்கமணி!
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டது.. விளாசிய தங்கமணி!- வீடியோ
நாமக்கல்: ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தினகரனுக்கும் தமிழக அரசுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுனேயே தினகரனுக்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக நினைப்பு வந்துவிட்டதாக கூறினார்.
அந்த தலைக்கணம் மற்றும் திமிரில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 420 என்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அமாவாசை என்றும் வசை பாடி வருகிறார் என்றும் அவர் கூறினார்.
தினகரனால் மக்களுக்கு நல்லது செய்யமுடியாது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications