குடிநீர் கேட்டு அமைச்சர் உதயகுமாரை முற்றுகையிட்ட பெண்கள்...திருவண்ணாமலையில் பரபரப்பு!
திருவண்ணாமலை அய்யம்பாளையம் என்ற ஊரில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சர் உதயகுமாரை மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சர் உதயகுமாரை பொதுமக்களும், பெண்களும் முற்றைகையிட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏரி மற்றும் கால்வாய் பகுதிகளில் குழி தோண்டி, அதிலிருந்து வரும் நீரை வடிகட்டி குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அய்யம்பாளையம் என்ற ஊரில், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் உதயகுமார் சென்றிருந்தார். அப்போது பொதுமக்களும் பெண்களும் அமைச்சரை முற்றுகையிட்டு, குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
பொதுமக்கலீல்ன் இந்த எதிர்பாராத முற்றுகையால், அமைச்சர் உதயகுமார் திணறிப் போய், பதிலளிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மக்களிடம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, அமைச்சரை மக்களிடமிருந்து மீட்டுள்ளார்.
அண்மையில் கோவையில் அமைச்சர் வேலுமணியையும் மக்கள் இவ்வாறு முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications