பூஜைக்கு மத்தியில் கொஞ்சம் வேலை.. அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த வளர்மதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா முதல்வராக வேண்டி பூஜை, பிரார்தனை என்று கோவில் கோவிலாக சுற்றி வரும் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி அவ்வப்போது அங்கன்வாடி மையங்களில் சமைக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின்கீழ் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 2014-2015-ம் ஆண்டில், ஆயிரத்து 413 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Minister Valaramathi inspects Anganvadi centres

தமிழ்நாடு சத்துணவு சங்கத்தைச் சேர்ந்த சில பணியாளர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சத்துணவு திட்ட செயல்பாட்டில் எவ்வித சுணக்கமும் இன்றி, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Minister Valaramathi inspects Anganvadi centres

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். சென்னை தெற்கு போக் சாலையில் உள்ள அங்கன் வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பா.வளர்மதி ஆய்வு செய்தார்.குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

சுகாதாரமான முறையில் சுவைமிக்க உணவு வழங்க வேண்டுமென சத்துணவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+