டெங்குவிற்கு எங்கு சிகிச்சை பெற்றாலும் செலவு அரசுடையது தான்... விஜயபாஸ்கர் திட்டவட்டம்!
டெங்கு காய்ச்சலுக்கு எங்கு சிகிச்சை பெற்றாலும் அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் செலவை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான செலவை அரசே ஏற்கும்.

தமிழகத்தில் 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தக்க சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications