Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. போலீஸ் வளையத்தில் பரமக்குடி...!

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளது. அங்கு இன்று அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி, அன்வர்ராஜா எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Ministers pay tributes to Imanuel Sekharan on his death anniversary

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நினைவிடம் மற்றும் பரமக்குடியின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3 ஐ.ஜி, 3 டி.ஐ.ஜி மற்றும் 15 எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முக்கிய இடங்களில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கண்காணிப்பு பணியில் ஆள் இல்லாத விமானம் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடியில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தலித் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+