ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பதறிய நோயாளிகள், உறவினர்கள்
சென்னை : ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, நோளிகள் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து நோயாளிகள் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 2-வது ‘பிளாக்' கட்டிடத்தின் முதல் தளத்தில் 213-வது வார்டில் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வார்டில் 8 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வார்டில் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி (வென்டிலேட்டர்) உள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு ஒரு செயற்கை சுவாச கருவியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து தீப்பொறியுடன் கரும்புகை வெளியேறியது.
அந்த கருவிக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாயில் இருந்து பெரும் சத்தத்துடன் வாயு வெளியேறியது. இதனால் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
பாதுகாப்பு கருதி உடனடியாக அந்த வார்டுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை அதிகாரிகள், செயற்கை சுவாசமளிக்கும் கருவியில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவர்களை உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றிவிட்டோம். நோயாளிகளின் நலன் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.
எனினும் தீ விபத்தையடுத்து பல மணி நேரத்திற்குப் பிறகே நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் சகஜ நிலைக்குத் திருமபினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications