புண்ணியத்திற்காக கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
சென்னை: விவசாயிகளின் நன்மைக்காக ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வாருகிறது என்றும், புண்ணியம் தேடி கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார் என்றும் கூறி விமர்சனம் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதுகுறித்து முதல்வர் அளித்த பேட்டி: அரசுக்கு சொந்தமான ஏரி, குளங்களை தூர்வார உரிய அனுமதியை பெற வேண்டும். இதை அறிந்திருந்தும் முன் அனுமதியின்றி ஸ்டாலின் தூர்வார செல்வதால் தான் பிரச்சனை வருகிறது. விவசாயிகளின் நன்மைக்காக ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வாருகிறது . புண்ணியம் தேடி கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் 2,065 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெறவுள்ளன. குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடக்கும் நிலையில் அரசுக்கு களங்கம் விளைவிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். செண்பதோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் 21% சதவீதமாக இருந்த உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை, தற்போது 44.3%-ஆக உள்ளது. மாணவர்களின் நலனை காக்கும் அரசாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications