சிவாஜி சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயர் நீக்கவே சிலை அகற்றம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சிவாஜி சிலையின் கல்வெட்டில் இருந்த கருணாநிதியின் பெயரை நீக்குவதற்காகவே அவரது சிலை மெரினாவிலிருந்து அகற்றப்பட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சிவாஜி சிலையில் ஜெயலலிதாவின் பெயரை பொறிப்பதற்காகவே அவரது சிலை மெரினாவில் இருந்து அகற்றப்பட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கடந்த மே மாதம் முடிக்கப்பட்ட சிவாஜி கணேசனின் மணி மண்டபம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று திறக்கப்பட உள்ளது. அத்துடன் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜியின் சிலையும் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரி பணம் செலவு செய்யப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை மீறி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுகின்றனர். புதிய ஆளுநர் ஜனநாயக ரீதியில் நடுநிலையுடன் செயல்படுவார் என நம்புகிறேன்..
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்களின் இன்னல்களை கவனிக்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுகவினர் தொடர் மக்கள் பணியில் ஈடுபட்டுவர்.
மெஜாரிட்டியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தற்போது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. எந்த வகையிலும் அதிமுக ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி அரசுக்கு கவலையில்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications