89 எம்.எல்.ஏ.க்கள் உள்ள திமுகவின் ‘பந்து’ வந்தால் என்ன நடவடிக்கை? ஆளுநருக்கு ஸ்டாலின் பரபர கேள்வி
89 எம்.எல்.ஏ.க்கள் உள்ள திமுகவின் பந்து வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: 89 எம்.எல்.ஏக்கள் உள்ள திமுகவின் பந்து வந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என ஆளுநருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமணத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட இயக்கத்தை பொறுத்தவரையிலே எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. கொல்லைப் புறமாக திமுக ஆட்சிக்கு வராது.
மக்களிடம் உரிமையுடன் ஆதரவு பெற்றுதான் ஆட்சிக்கு வருவோம். தற்போது அதிமுகவின் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
இந்த எண்ணிக்கை 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்ம் சூழ்நிலை உருவாகி உள்ளது.

திமுகவின் பந்து
89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய பந்து வந்தால் ஆளுநர் என்ன நட வடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போகிறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி.

திமுக முடிவு எடுக்கும்
இப்பவே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திமுக ஒரு முடிவு எடுக்கும்.

மாற்றமே இல்லை
அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திமுகவின் சுய நலத்திற்காக அல்ல. தமிழக மக்களின் நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

கொஞ்ச நாட்கள்தான்..
இவ்வளவு நாள் பொறுத்து இருந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான். நான் கொஞ்சம் ஆண்டுகளோ, கொஞ்சம் மாதங்களோ இல்லை.. கொஞ்சம் நாள்தான்

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்
விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தயாராக இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையை நிச்சயமாக தி.மு.க. உருவாக்கி தரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications