சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல்
தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சங்கர், நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர், உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சங்கரின் தற்கொலை அதிர்ச்சியளிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் சங்கரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சங்கர் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற கருணாஸ் அங்கிருந்த அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.