18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கோழைத்தனம் - ஸ்டாலின்

சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குதிரை பேர ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி செய்துள்ளார். இதனை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக எம்எல்ஏக்கள் தங்களின் விடுதியை காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர்.

இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதல்வரும் சபாநாயகரும் கூட்டுச்சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

கோழைத்தனம்

கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அரசியல் நெருக்கடி

ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கடமை தவறிய ஆளுநர்

கடமை தவறிய ஆளுநர்

அரசியல் சட்ட கடமையை செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

பதில் சொல்ல வேண்டும்

பதில் சொல்ல வேண்டும்

பெரும்பான்மையை இழந்த அரசு கஜானாவை கையாள மத்திய பாஜக அரசு அனுமதித்துள்ளது என்றும், மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்துக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+