ம.ந.கூ., பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்த அரசு ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணியோ, பாமகவோ, பாஜகவோ அல்லது நாம் தமிழர் கட்சியோ முன்னிலை பெறத் தவறி விட்டன.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட சரி பாதியாக முன்னிலை பெற்றன.

MNK and other parties fail to lead in Postal ballots

இரு கட்சிகளும் மாறி மாறி முந்திக் கொண்டுள்ளன. இந்த இருவரைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தபால் வாக்குகளில் முன்னிலை கிடைக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார் போன்ற அரசுப் பணியில் இருப்பவர்கள்தான் தபால் வாக்குகளைப் போடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக, அதிமுகவை மட்டுமே இந்த தரப்பு ஆதரித்துள்ளது என்பது புலனாகியுள்ளது.

ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணியோ, தேமுதிகவோ, தமாகாவோ, பாமகவோ, பாஜகவோ, நாம் தமிழர் கட்சியோ முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+