பொள்ளாச்சியில் களம் இறங்கிய கமல் கட்சி.. ஸ்ரீபிரியா, சினேகன், பெரும் திரளான பெண்கள் அதிரடி பேரணி!

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: சும்மா பேசிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது.. அதிரடியில் இறங்கி பொள்ளாச்சியை அதிர வைக்க வேண்டும் என்று இறங்கிவிட்டது கமலின் மக்கள் நீதி மய்யம்!

தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளும், ட்விட்டர் பதிவுகளும் வெளியிட்டு வருகின்றனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளையும் கடுமையாக சாடி விமர்சனமும் செய்து வருகின்றனர்.

அறிக்கை

அறிக்கை

ஆனால் இந்த விஷயத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கொதித்து போய் உள்ளது. குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முதலில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கண்டன ஊர்வலம்

கண்டன ஊர்வலம்

அடுத்து இது சம்பந்தமாக போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தார். இப்போது பொள்ளாச்சியே திரும்பி பார்க்கும் அளவுக்கு கண்டன ஊர்வலத்தை நடத்தி உள்ளார். இது யாருமே எதிர்பார்க்காத அதிரடி ஆகும்.

அதிரடி கமல்

அதிரடி கமல்

பொதுவாக மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து அதை களைவதே மய்யத்தின் முதல் வேலையாக இருந்து வருகிறது. அதன்படி பார்த்தால் பொள்ளாச்சி விஷயத்திலும் அதிரடியாக களம் குதித்துள்ளது கமலின் கட்சி.

ஆவேச கோஷம்

ஆவேச கோஷம்

இந்த பேரணியில் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டனர். கவிஞர் சினேகன் தலைமையில் பெண்கள் அணிதிரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக ஆவேசத்துடன் கோஷமிட்டபடி பேரணியில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+