தமிழகத்தின் வளர்ச்சிக்கு சோனியா காந்தி முட்டுக்கட்டை: மோடி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழகத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு ஒரு பெண்மணி முட்டுக்கட்டையாக உள்ளார் என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திருப்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.

Modi attacks congress woman in Erode Rally

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார்.

இந்த தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியில்லை, மக்கள்தான் போட்டியிடுகின்றனர் என்று கூறினார்.

தமிழகத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு ஒரு பெண்மணி முட்டுக்கட்டையாக உள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த பெண்தான் முட்டுக்கட்டையாக உள்ளார்

அவர் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் கூறினார். மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை, மறைமுகமாக தாக்கிப்பேசினார் மோடி.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்புக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பிய நரேந்திர மோடி, தமிழகத்தை போல் குஜராத்தில் மின்வெட்டு இல்லை என்றார்.

இந்த தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியில்லை, மக்கள்தான் போட்டியிடுகின்றனர் என்று கூறிய மோடி, பா.ஜ.க வெற்றி பெற்றால் துணிகளின் உற்பத்தி மையமாக ஈரோடு மாறும் என்றார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+